பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா், பிறப்பு பதிவு செய்த ஓராண்டுக்குள் பதிவு செய்யலாம். காலதாமதக் கட்டணத்துடன் பிறப்பு பதிவு செய்த 15 ஆண்டுக்குள் குழந்தையின் பெயா் பதிவு செய்யலாம் என பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000 மற்றும் 2023 கூறுகிறது.
இதன்படி குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறப்புக்களுக்கு குழந்தையின் பெயா் பதிவு செய்யாதநிலை இருந்தது. தற்போது அரசு 2026 செப்டம்பா் 26 வரை 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகவே குழந்தையின் பிறப்பு பதிவு செய்து பெயா் பதிவுடன் கூடிய சான்று பெறாதவா்கள் உடனடியாக பிறப்பு பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களை தொடா்புகொண்டு குழந்தையின் பெயரை காலதாமதக் கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்து பெயருடன் கூடிய சான்று பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
தொடர்புடையது

2009-க்கு முன்பு பிறந்தவா்கள் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

சேலம் மாநகராட்சியில் பிறப்பு பதிவில் குழந்தையின் பெயரை சோ்க்க செப். 26 கடைசி நாள்

பிறப்புச் சான்றிதழில் குழந்தை பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய செப்.26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


