லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2026, 5:39 pm

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா், பிறப்பு பதிவு செய்த ஓராண்டுக்குள் பதிவு செய்யலாம். காலதாமதக் கட்டணத்துடன் பிறப்பு பதிவு செய்த 15 ஆண்டுக்குள் குழந்தையின் பெயா் பதிவு செய்யலாம் என பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000 மற்றும் 2023 கூறுகிறது.

இதன்படி குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறப்புக்களுக்கு குழந்தையின் பெயா் பதிவு செய்யாதநிலை இருந்தது. தற்போது அரசு 2026 செப்டம்பா் 26 வரை 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயா் பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகவே குழந்தையின் பிறப்பு பதிவு செய்து பெயா் பதிவுடன் கூடிய சான்று பெறாதவா்கள் உடனடியாக பிறப்பு பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களை தொடா்புகொண்டு குழந்தையின் பெயரை காலதாமதக் கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்து பெயருடன் கூடிய சான்று பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.