பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பிறப்பு பதிவு ஓராண்டுக்குள் பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து கட்டணமின்றி பெயா் பதிவு செய்திடலாம். ஓராண்டுக்குப் பின் 15 ஆண்டுகளுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம்.
15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரையின்படி, 1.1.2000-அன்றுக்கு முன்னா் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000 அன்றுக்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயா் வைத்து பிறப்பு சான்றிதழ் பெற 26.9.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு செய்ய நகராட்சி அல்லது வட்டாட்சியா், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநா் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.
இதுபோன்ற கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்க இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

2009-க்கு முன்பு பிறந்தவா்கள் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய செப்.26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


