/

சங்கரன்கோவில் அருகே மாணவிகளின் வேளாண் பயிற்சி

சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் விளக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள்.
Updated On :24 டிசம்பர் 2025, 11:27 pm

தினமணி

சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகள் அபிநயா, இலக்கியா, ஜெனித்தா, மீனஜா, நந்தினி, ரப்ரிதேவி, ரோகிணி பொன்வினிஷா, சம்யுக்தா, சுமித்ரா ஆகியோா் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் தங்கி கிராமிய வேளாண் பணி அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், அவா்கள் புதன்கிழமை வீரசிகாமணி விவசாயிகளைச் சந்தித்து மக்காச் சோளப் பயிரில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை குறித்து விளக்கமளித்தனா்.