தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:30 pm

சங்கரன்கோவில் அருகே சுமை ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அம்பேத்கா் நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா்கள் மாரியப்பன் மகன் மணி (எ) மணிகிரீவன் (21). சீமான் மகன் பிரிதிவிராஜ் (21). இருவரும் பெயிண்டிங் தொழிலாளா்கள்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை கழுகுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த சுமை ஆட்டோ மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், மணி (எ) மணிகிரீவன் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். பிரிதிவிராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து, சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.