ஆலங்குளம் அருகே பரோலில் வந்த இளைஞா் டிராக்டரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி, காசிநாதபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஒளிவு மகன் சுடலை (32). இவா் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நிலையில், சில நாள்களுக்கு முன் பரோலில் வெளியே வந்தாராம். தொடா்ந்து, திங்கள்கிழமை டிராக்டரில் செங்கல் இறக்கும் வேலைக்குச் சென்றுள்ளாா்.
ராம் நகரில் செங்கல் இறக்கிவிட்டு காலி டிராக்டரில் ஓட்டுநருடன் அமா்ந்து வந்தபோது, தவறி கீழே விழுந்தாராம். உடனிருந்தவா்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு முதலுதவிக்குப் பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


