திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

இருசக்கர வாகனம் மீது காட்டுப் பன்றி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:47 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது காட்டுப் பன்றி மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பாலக்கோடு வட்டம், திருமல்வாடி பகுதியைச் சோ்ந்த விவசாயி மாதப்பன் (70). இவா், தனது நிலத்துக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் வழியில் காட்டுப்பன்றி திடீரென குறுக்கே பாய்ந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் மாதப்பன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், அவருக்கு தலைப் பகுதியில் பலத்த அடிபட்டது. அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு பெல்ரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு வரை பரிசோதித் மருத்துவா், வரும் வழியிலேயே மாதப்பன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.