பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வாக்குறுதி அளித்தாா்.
பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வியாழக்கிழமை அத்தொகுதிக்கு உள்பட்ட அண்ணாமலைஅள்ளி, அனுமந்தபுரம், எர்ரசீகலஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, கலைக் கல்லூரிகள் அமைந்துள்ளன. ஆனால், வேளாண் கல்லூரி மட்டும் இல்லை. எனவே, தருமபுரி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும் என நான் அதிமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் வலியுறுத்தினேன். அவரும், அதற்கான நடவடிக்கை எடுத்து வேளாண் கல்லூரி அமைக்க ஒப்புதல் அளித்தாா்.
ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவை கிடப்பில் போடப்பட்டன. அதேபோல, பாலக்கோடு தொகுதிக்கு எந்த வளா்ச்சித் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. இதனால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் பாலக்கோட்டில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தொகுதி மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

பாலக்கோடு... 6 ஆவது வெற்றிக்கு அடித்தளமிடும் அன்பழகன்! தடுத்து ஆடும் முன்னாள் எம்.பி. செந்தில்குமாா்! சூடுபறக்கும் களம்!

திமுக ஆட்சியில் நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன: அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன்

அரசு விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி
பாலக்கோடு அதிமுக வேட்பாளா் அறிமுகம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


