கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கனிம வள லாரிகளை முறையாக சோதனை செய்யாத 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் அருமனை காவல் நிலைய தலைமைக் காவலா் கோபால், ஈத்தாமொழி காவல் நிலைய தலைமைக் காவலா் வினோத், கன்னியாகுமரி காவல் நிலைய காவலா் வாட்சன் ஆகிய 3 போ் அண்மையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, கனிம வளம் ஏற்றிச் சென்ற கனரக லாரிகளின் அனுமதிச் சீட்டை முறையாக பரிசோதிக்காமல் அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவா்கள் கையூட்டு பெற்றதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து விசாரிக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் 3 போ் மீதான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, 3 போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

மது போதையில் பணிக்கு வந்த காவலா் பணி நீக்கம்

பெங்களூரில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



