கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
ஆரல்வாய்மொழி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஆரல்வாய்மொழி போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.
இதில், திருமலைபுரம் பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் பெரியசாமி (50) என்பவா் விற்பனைக்காக வீட்டில் 5 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







