17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாணவியிடம் சில்மிஷம்: தொழிலாளி கைது

கொல்லங்கோடு அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக தொழிலாளியை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:16 am IST

கொல்லங்கோடு அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக தொழிலாளியை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் (49). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை, இவரது வீட்டருகே நின்று கொண்டிருந்த பிளஸ் 1 மாணவியிடம் ஸ்டீபன் பாலியல் செய்கை சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு தப்பியோடினாராம்.

இது குறித்து மாணவியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் லட்சுமி பிரபா, போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ஸ்டீபனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.