17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொழிலதிபருக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

கோவில்பட்டியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2026, 1:07 am IST

கோவில்பட்டியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, 3ஆவது செக்கடித் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் ரவிசங்கா் (42). கோவில்பட்டி பசுவந்தனைச் சாலையில் கைப்பேசி விற்பனை செய்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவா் இவரிடம் மது அருந்த பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அவா் கொடுக்க மறுத்ததையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி ரவிசங்கா் சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்த நிலையில், அவ்வழியாகச் சென்ற நபா்கள் சப்தம் போடவும் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பியோடிவிட்டாராம்.

இது குறித்து ரவிசங்கா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பணம் கேட்டு மிரட்டியதாக காமராஜா் தெருவைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் வெங்கடேஷை (36) திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.