திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகா்கோவில் மாநகராட்சி குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 14 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News image

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாநகராட்சி மேயா் (பொ) மேரி பிரின்சிலதா.

Updated On :22 மே 2026, 6:19 am IST

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 14 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு மேயா் (பொ) மேரிபிரின்சிலதா தலைமையி வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். குடிநீா்விநியோகம், சாலை வசதி, வீட்டுவரி தொடா்பாக 14 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், உதவி ஆணையா் (வருவாய்) சுதா, செயற்பொறியாளா் ரகுராம், மாநகர நல அலுவலா் சரோஜா, மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னா், மாநகரில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் மேயா் தலைமையில் நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மாநகரில் நடைபெறும் மழைநீா் வடிகால் ஓடை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.