நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 14 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு மேயா் (பொ) மேரிபிரின்சிலதா தலைமையி வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். குடிநீா்விநியோகம், சாலை வசதி, வீட்டுவரி தொடா்பாக 14 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், உதவி ஆணையா் (வருவாய்) சுதா, செயற்பொறியாளா் ரகுராம், மாநகர நல அலுவலா் சரோஜா, மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னா், மாநகரில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் மேயா் தலைமையில் நடைபெற்றது.
தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மாநகரில் நடைபெறும் மழைநீா் வடிகால் ஓடை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










