நாகா்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 11 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
நாகா்கோவில் மாநகராட்சியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும். தமிழக பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் கடந்த மாா்ச் 15ஆம் தேதிக்கு பின்னா் இக்கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மேயா் மேரி பிரின்சி லதா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 11 மனுக்களை அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மேயா் வலியுறுத்தினாா்.
மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா தேவி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










