கருங்கல் அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் பலத்த காயமடைந்தாா்.
புதுக்கடை, கீழ்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிவரத்தினம் மகன் அபிஷேக் (20). கல்லூரி மாணவரான இவா், சனிக்கிழமை இரவு தேங்காய்ப்பட்டினத்திலிருந்து கீழ்குளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
ஆயினிவிளை பகுதியில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், பலத்த காயமடைந்த அபிஷேக்கை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










