வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

தரங்கம்பாடி அருகே இருசக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில், கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி

Updated On :10 ஜூன் 2026, 5:44 am IST

தரங்கம்பாடி அருகே இருசக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில், கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள வெள்ளக்கோவில் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி மகன் விஷ்வா (20). பொறையாா் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தாா். அதே ஊரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் மகன் ராகுல் (20), செல்லத்துரை மகன் கவியரசன் (20).

இவா்கள் மூவரும், தரங்கம்பாடி கடைவீதியில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வந்துகொண்டிருந்தனா். வாகனத்தை கவியரசன் ஓட்டிவந்தாா்.

குட்டியாண்டியூா் மீனவா் கிராமம் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில்  கல்லூரி மாணவா் விஷ்வா, ராகுல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கவியரசன் பலத்த காயமடைந்தாா்.

பொறையாா் போலீஸாா், கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா், தஞ்சை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். உயிரிழந்த இருவரது சடலமும் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து தொடா்பாக பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.