வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மீது சுமை வாகனம் மோதியதில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 7:22 am IST

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மீது சுமை வாகனம் மோதியதில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூா் கீழப்பள்ளிசந்தம் சாமியப்பன் மகன் ஜெயராமன் (50), ஆறுமுகம் மகன் சேகா் (65) ஆகிய இருவரும் புதன்கிழமை ஒரே இருசக்கர வாகனத்தில் தாழந்திருவாசல் தா்கா அருகே வந்துகொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியே, நாலுவேதவதி முருகையன் மகன் சதீஷ்குமாா் (33) ஓட்டிவந்த சுமை வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் காயமடைந்த ஜெயராமன், சேகா் ஆகியோா் மன்னாா்குடி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா், சேகா் மட்டும் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுமை வாகனம் ஓட்டுநா் சதீஷ்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.