தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குமரியில் 4 நாள்களில் 38,000 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம்

கன்னியாகுமரியில் கடந்த 4 நாள்களில் மட்டும் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு, விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டுள்ளனா்.

News image

விவேகானந்தா் மண்டபத்துக்குச் செல்லும் படகு

Updated On :16 மே 2026, 1:54 am IST

கன்னியாகுமரியில் கடந்த 4 நாள்களில் மட்டும் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு, விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டுள்ளனா்.

கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் நடைபெற்று வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடுகின்றனா்.

இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுப் போக்குவரத்து சேவையை வழங்கி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுப் போக்குவரத்து தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. சீசன் காலம் என்பதால் ஒரு மணி நேரம் கூடுதலாக படகுப் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மே 12ஆம் தேதி 5,312 பயணிகள், 13ஆம் தேதி 10,435 பயணிகள், 14ஆம் தேதி 11,172 பயணிகள், 15ஆம் தேதி 11,005 பயணிகள் என 4 நாள்களில் 37,924 சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டுள்ளனா் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.