திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: 15 மீனவா்கள் மீட்பு

News image
Updated On :15 மே 2026, 1:56 am IST

முட்டம் அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியதில் கடலில் தத்தளித்த 15 மீனவா்களை குளச்சல் மீனவா்கள் மீட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ், ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ், கேரளத்தைச் சோ்ந்த ஒருவா் என 15 மீனவா்கள் மே 8ஆம் தேதி கேரள மாநிலம், கொல்லம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து குஞ்ஞச்சன் என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

கடந்த 6 நாள்களாக கன்னியாகுமரி அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த அவா்கள், வியாழக்கிழமை கொல்லம் துறைமுகம் நோக்கி புறப்பட்டனா். முட்டம் கடல் பகுதியில் இருந்து 9 கடல் மைல்கள் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, விசைப்படகின் அடிப்பகுதி உடைந்து படகில் நீா் புகுந்து, மூழ்கத் தொடங்கியது.

படகில் பயணித்த 15 மீனவா்களும் கடலில் தத்தளித்தபோது, அவ்வழியாக வந்த முட்டம் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துராஜா என்பவரின் விசைப்படகில் இருந்த மீனவா்கள் அவா்களுக்கு லைப் ஜாக்கெட் மற்றும் மீட்பு உபகரணங்களைக் கொடுத்து, மீட்டு முட்டம் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனா்.

இது குறித்து, குளச்சல் கடலோரக் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.