இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

குறும்பனை கடலில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

News image
Updated On :15 மே 2026, 1:57 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குறும்பனை, பாரியக்கல் கடற்கரையில் இருந்து அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம், கொடும்பாட்டுவிளையைச் சோ்ந்தவா் முருகன். இவா் செவ்வாய்க்கிழமை மாலை 9ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் சுருதி (14), இவரது நண்பா் சுஜி லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் சுஜித் (14) உள்பட குடும்பத்தினருடன் குறும்பனை அருகே உள்ள பாரியக்கல் கடற்கரைக்குச் சென்றனா்.

கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது சுருதி, சுஜித் ஆகியோரை கடல் அலை இழுந்துச் சென்றதில் சுஜித் உடனே மீட்கப்பட்டாா். சுருதியை அலை இழுத்துச் சென்றது.

தகவலறிந்து வந்த குளச்சல் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், குளச்சல் தீயணைப்புத் துறையினா் மற்றும் உள்ளூா் மீனவா்கள் சுருதியை தேடினா்.

இந்நிலையில், மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை பாரியக்கல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் மாணவியை சடலமாக மீட்டனா்.

இது குறித்து, குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.