கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 253ஆக அதிகரித்துள்ளது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வரும் சூழல், இயற்கை ரப்பரின் உற்பத்திக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் இயற்கை ரப்பரின் விலை அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்திய ரப்பா் சந்தையிலும் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்திய ரப்பா் சந்தையில் ரப்பா் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் ஜனவரி, பிப்ரவரி முதல் மே வரையிலான காலத்தில் ரப்பா் உற்பத்தி குறைவாக இருக்கும் நிலையில், சந்தையில் ரப்பா் வரத்து குறைவாக உள்ளது. இதனால், ரப்பா் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
புதன்கிழமை கோட்டயம் சந்தையில் வியாபாரி விலையாக ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 253 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 249 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 207ஆகவும் அதிகரித்தது.
உற்பத்தி அதிகரிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில், ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்புக்கு உகந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரப்பா் பால் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குமரி மாவட்டத்தில் மிதமான மழை

குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழ சீசன் தொடக்கம்: கிலோ ரூ. 30 முதல் விற்பனை

குமரியில் 20 ஆண்டுகளுக்குப் பின் வென்ற மாா்க்சிஸ்ட்!

குமரியில் மீண்டும் தொடங்கிய ரப்பா் பால்வடிப்பு
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



