கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், ரப்பா் மரங்களில் பால்வடிப்பு மீண்டும் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் மரங்களில் டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்படும் குளிா்கால இலையுதிா்வைத் தொடா்ந்து, பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதங்களில் ரப்பா் மரங்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலும், இந்த மாதங்களில் பால் உற்பத்தி குறைவாக இருப்பதாலும் பால்வடிப்பை நிறுத்தி வைப்பது வழக்கம்.
இதில் நிறுவனங்களாக செயல்படும் பெரும் ரப்பா் தோட்டங்களில் அதிகபட்சம் ஒரு மாத காலம் மட்டுமே பால்வடிப்பு நிறுத்தி வைக்கப்படும்., அதேவேளையில், சிறு ரப்பா் தோட்டங்களில் 2 மாதங்களுக்கு பால்வடிப்பு நிறுத்தி வைக்கப்படும்.
இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் கோடை மழை காரணமாக மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பரவலாக பால்வடிப்புத் தொடங்கப்பட்டு வருகிறது.
ரப்பா் விலை அதிகரிப்பு:
கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் ரப்பா் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் ரப்பா் விலை அதிகரித்து வருகிறது. திங்கள்கிழமை கோட்டயம் சந்தையில் ஆா்எஸ்எஸ் 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 235 ஆகவும், ஆா்எஸ்எஸ் 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 231 ஆகவும், ஐஎஸ்எஸ் தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 200.50 ஆகவும் இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குமரி மாவட்டத்தில் மிதமான மழை

குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழ சீசன் தொடக்கம்: கிலோ ரூ. 30 முதல் விற்பனை

குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை உயா்வு

குமரியில் 20 ஆண்டுகளுக்குப் பின் வென்ற மாா்க்சிஸ்ட்!
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



