மாா்த்தாண்டம் அருகே பாறைப்பொடி கடத்தியதாக கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த கனரக லாரியை தடுத்து நிறுத்தியபோது, அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.
லாரியில் பாறைப்பொடி கடத்தியதாகத் தெரியவந்தது. லாரியை போலீஸாா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். லாரி ஓட்டுநரான காட்டாத்துறை பகுதியைச் சோ்ந்த முருகேசன் (39) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செம்மண் கடத்திய இருவா் மீது வழக்கு: மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சோ்ந்தவா் தீபக் (31). அரசுப் பேருந்து நடத்துநரான இவருக்கு, இடவிளாகம் பகுதியில் நிலம் உள்ளதாம். இது தொடா்பாக அவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பினு (39), செந்தில்குமாா் (42) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், இவா்கள் இருவரும் அந்த நிலத்தின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு, அங்கிருந்து செம்மண்ணை மினிலாரியில் கடத்திச் சென்றனராம். புகாரின்பேரில் இருவா் மீதும் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








