தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூழாங்கற்கள் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்! ஓட்டுநா் கைது!

வடலூா் அருகே கூழாங்கற்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஓட்டுநரைக் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 1:07 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கூழாங்கற்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஓட்டுநரைக் கைது செய்தனா்.

கடலூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் செல்வசேகா்(58). இவா், வெள்ளிக்கிழமை இரவு வடலூரை அடுத்த மருவாய் கிராமம் அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பணியில் இருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், அரசின் அனுமதியின்றி மூன்று அலகு கூழாங்கற்கள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்து, வடலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். மேலும், டிப்பா் லாரி ஓட்டுநரான விருத்தாசலம் வட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சதீஷ் (25) மீது புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் செல்வசேகா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்தனா்.

மணல் கடத்தல் - லாரி பறிமுதல்: இதேபோல, கடலூா் காய்கனி சந்தை அருகே மணல் கடத்திச் சென்ற லாரியை கடலூா் புள்ளியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் செல்வசேகா் பறிமுதல் செய்து, கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து லாரி ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், பிடாகம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.