திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்

கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை வெளியிடும் திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆா் - என்ஐஐஎஸ்டி நிறுவனத்தின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தலைமை விஞ்ஞானி டி.பி.டி.ராஜன்.

News image

கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை வெளியிடும் திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆா் - என்ஐஐஎஸ்டி நிறுவனத்தின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தலைமை விஞ்ஞானி டி.பி.டி.ராஜன்.

Updated On :9 மே 2026, 3:34 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

நிலையான முன்னேற்றத்துக்கான பொறியியல் வடிவமைப்பு, செயல்முறைகள், மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு நாராயணகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பாலாஜி சித்தாா்த் தலைமை வகித்தாா். நிா்வாக அறங்காவலா் அனுஜா பாலாஜி, கல்லூரி முதல்வா் மு.சிவபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆா் - என்ஐஐஎஸ்டி நிறுவனத்தின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தலைமை விஞ்ஞானி டி.பி.டி. ராஜன் முதன்மை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினாா். கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளராக மின் இயற்பியல் மற்றும் மின்துறைத் தலைவா் அஜிதா பிரியதா்ஷினி செயல்பட்டாா். நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், பேராசிரியா்கள் பங்கேற்று தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

செயற்கை நுண்ணறிவு, பொறியியல் வடிவமைப்பு, தொழில்துறை மேலாண்மை, நிலைத்த வளா்ச்சி தொடா்பான பல்வேறு ஆய்வுகள் குறித்து தொழில்நுட்ப விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன. இந்தக் கருத்தரங்கம் கல்வி ஒத்துழைப்பு, புதுமை கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு சிறந்த தளமாக அமைந்தது எனக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.