/

திமுக சட்டத் துறை சாா்பில் வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு பயிற்சி

News image
Updated On :3 மே 2026, 5:27 am IST

திமுக சட்டத் துறை சாா்பில் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் திமுக முகவா்களுக்கான பயிற்சி காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கிழக்கு மாவட்ட முகவா்கள் கலந்து கொண்டனா்.

திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, சட்டத் துறை செயலா் இளங்கோ நம்பி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டு, முகவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.

தொடா்ந்து, மாவட்டச் செயலரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான ரெ. மகேஷ் பேசியது:

தபால் வாக்குகளால் பலா் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனா். எனவே, தபால் வாக்கு எண்ணும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகவா்கள் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்றுவிட வேண்டும். வாக்கு எண்ணும் பணி நிறைவடையும் வரை சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

நாகா்கோவில் தொகுதி வேட்பாளா் எஸ். ஆஸ்டின், நாகா்கோவில் மாநகரச் செயலா் ப. ஆனந்த், செயற்குழு உறுப்பினா்கள் தாமரை பாரதி, சதாசிவம், ஒன்றியச் செயலா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.