தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுக்கடை அருகே அழுகியநிலையில் கூலித்தொழிலாளி சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள ஈந்திக்காட்டுவிளை பகுதியில் வீட்டிலிருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

News image

சடலம் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:55 pm

புதுக்கடை அருகே உள்ள ஈந்திக்காட்டுவிளை பகுதியில் வீட்டிலிருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

பூட்டேற்றி, ஈந்திக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமாா் (57). தொழிலாளியான இவா் பலஆண்டுகளாக தன் மனைவி, குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக புதுக்கடை போலீஸாருக்கு அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, சுரேஷ்குமாா் அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷ்குமாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.