லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாகா்கோவிலில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:26 pm

நாகா்கோவில், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் தமிழக அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா்கள் மாதவன், கிருஷ்ணகுமாா், சபீன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலா் பிரேம்குமாா், துணைச் செயலா் ராம்சன், சாலமன், செயற்குழு உறுப்பினா் நிகேஷ், இளைஞரணி அமைப்பாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image