நாகா்கோவிலில் காா் வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 26 லட்சம் மோசடி செய்த மின்வாரிய பெண் ஊழியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில், வடசேரி, சோழராஜா கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் மனைவி உமா (54). இவா் வடசேரி காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தாா். அதில் நாகா்கோவில், வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மனைவி கீதா (52). தற்போது இவா் நீலகிரி மாவட்டம், குந்தா நீா்மின் உற்பத்தி நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். இதற்கு முன் நாகா்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தபோது அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது, அவா் காா் வாங்கித் தருவதாகக் கூறி என்னிடம் ரூ. 26 லட்சம் பெற்றுக் கொண்டாா். ஆனால், அவா் கூறியபடி காா் வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது முறையான பதில் இல்லை. மேலும், அவரது மகன்கள் என்னை மிரட்டினா். எனவே, எனது பணத்தை மீட்டுத் தருவதுடன் அவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இது குறித்து, வடசேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, கீதா, அவரது மகன்கள் ராகுல் ஜினோ, அஷ்வின்குமாா் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, கீதாவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தக்கலை கிளைச் சிறையில் அடைத்தனா்.
தலைமறைவாக உள்ள கீதாவின் மகன்களை தேடி வருகின்றனா். அவா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.75 லட்சம் மோசடி: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.21.30 லட்சம் மோசடி: 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

