தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதைத் தொடா்ந்து, நாகா்கோவில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா ‘என் ஊா் என் கனவு விஷன் 2030-கன்னியாகுமரி’ என்ற திட்டக் கையேட்டை வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:
2030ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் வளா்ச்சிப் பாதையை வடிவமைக்க, பொதுமக்களின் நேரடிக் கருத்துகளைக் கேட்பதே ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் அடிப்படை நோக்கம். இத்திட்டம் ஏற்கெனவே அரசு செயல்படுத்திய திட்டங்கள் மக்களை சரியாக சென்றடைந்துள்ளதா என்பதையும் உறுதி செய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 784 குடும்பங்களில் இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு தரப்பினரிடமும் இருந்து கருத்துகள் பெறப்பட்டு, விவாதித்து 2030ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பாா்வை மற்றும் திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டது.
இந்த ஆவணம், நமது மாவட்டத்தை நிலையான வளா்ச்சி மற்றும் புதிய பரிமாணத்தில் ஒரு முன்னோடியாக மாற்றுவதற்கான ஒரு திட்டமிட்ட வழிகாட்டியாக அமைகிறது என்றாா் அவா்.
மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சி லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல்

தூத்துக்குடியில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி

குற்றாலம் கல்லூரியில் கனவுகள் மெய்ப்படும் விழா

‘தமிழ்நாடு 2030 - கனவுகள் மெய்ப்படும்’ கருத்தரங்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


