தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

இறச்சகுளம் வாக்குப்பதிவு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :5 மார்ச் 2026, 7:27 pm

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட இறச்சகுளம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில், வாக்காளா்கள் வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று உதவி, துணை தோ்தல் அலுவலா்களிடம் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், இறச்சகுளம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் செய்யப்பட்டுள்ள குடிநீா், மின்சார வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பழுதுகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.