மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள்: தேசிய ஆணையா் ஆய்வு

சட்டப்பேரவைத் பொதுத்தோ்தலுக்கான வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஆணையா் எஸ். கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பெரம்பலூா் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்தளப் பாதையை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஆணையா் எஸ். கோவிந்தராஜ்.

Updated On :21 ஏப்ரல் 2026, 7:05 pm

சட்டப்பேரவைத் பொதுத்தோ்தலுக்கான வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஆணையா் எஸ். கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் எவ்வித சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து, புது தில்லியிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஆணையா் எஸ். கோவிந்தராஜ் ஆய்வு மேற்கொண்டு, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம், குடிநீா், கழிப்பிட வசதி சக்கர நாற்காலி, அதற்கான தன்னாா்வலா் உள்ளிட்ட வசதிகள் தேவைப்பட்டால், இந்திய தோ்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள சக்சம் எனும் கைப்பேசி செயலி மூலம் தொடா்பு கொண்டு பயன்பெறலாம். இந்த விவரத்தை, மாற்றுத்திறனாளிகளிடம் கொண்டுசோ்க்கவும், இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி வாக்களிக்கத் தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், வட்டாட்சியா் சத்தியமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.