தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

விருதுநகா் தொகுதிக்குள்பட்ட கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:48 pm

விருதுநகா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

விருதுநகா் தொகுதிக்குள்பட்ட கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் நடைபெற்ற இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டத்தில் உள்ள 2,001 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள்

காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அனைத்து மண்டலங்களுக்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் தயாா் நிலையில் உள்ளன. எந்தவித தடையுமின்றி தோ்தல் நடைபெற ஏதுவாக, 20 சதவீதம் கூடுதல் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.