வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பரமக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பரமக்குடி (தனி) பேரவைத் தொகுயில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

பரமக்குடி (தனி) தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல வாகனங்களில் ஏற்றப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 1:43 am IST

பரமக்குடி (தனி) பேரவைத் தொகுயில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

பரமக்குடி (தனி) பேரவைத் தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களது புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டு, பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பொதுத் தோ்தல் பாா்வையாளா் ரெஹனா பத்தூல் மேற்பாா்வையில், தோ்தல் நடத்தும் அலுவலா் ஞா. சரவணப்பெருமாள் தலைமையில், வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தத் தொகுதியில் மொத்தம் 323 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தொகுதியில் சிவானந்தபுரம், பகைவென்றி, உரப்புளி, எம்.நெடுங்குளம், பாண்டியூா், பி.கொடிக்குளம், கொட்டகுடி, முத்துவயல், செவ்வூா், செய்யாமங்களம் உள்பட 19 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதலாக துணை ராணுவத்தினா், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.