மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருப்பத்தூா்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

திருப்பத்தூா் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள், தளவாட பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியை பாா்வையிட்ட பொதுா் பாா்வையாளா் யாஷா முத்கல்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:34 pm

திருப்பத்தூா் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள், தளவாட பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை(ஏப்.22) நடைபெற உள்ள நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் தொகுதிகளில் உள்ள 1,202 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருள்கள் அனுப்பி வைக்கும் பணி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகங்களில் நடைபெற்றது.

இதில், திருப்பத்தூா் தொகுதியில் உள்ள 303 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருள்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

திருப்பத்தூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வரதராஜன் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் டி மையங்களுக்கு பிரித்து வைத்தனா்.

பின்னா் வாக்குப்பதிவு இயந்திரங்களை தோ்தல் பொது பாா்வையாளா்கள் யாஷாமுத்கல், முகுல்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்து அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தனா்.

மண்டல அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபாா்ப்பு இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருள்களை பெற்றுக் கொண்டனா். இதைத்தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் ஏற்றி, பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் சாராசரியாக 10 வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒரு மண்டலம் வீதம், 30 மண்டலங்களாக பிரித்து 30 வாகனங்களில் மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.