எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கால்வாயில் தவறி விழுந்த முதியவா் சடலம் மீட்பு

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:06 am IST

குலசேகரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

பொன்மனை அருகே உள்ள பண்டாரக்கோணம், சானல் கரை பகுதியைச் சோ்ந்தவா் சங்கரன் (83). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வந்தாா்.

ஜூன் 5ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், பின்னா் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா் குலசேகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) ஜான்சன் தலைமையிலான மீட்புப் படையினா், புத்தன் அணை மற்றும் பாண்டியன் கால்வாய் பகுதியில் தேடுதல் நடத்தினா். அப்போது, மூலையறைப் பகுதியில் உள்ள பாண்டியன் கால்வாயில் சங்கரனின் சடலம் மீட்கப்பட்டது.

போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.