/

மாா்த்தாண்டத்தில் பதிவெண் இல்லாத 4 லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டத்தில் பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்ட, கனிமவளம் ஏற்றிச் சென்ற 4 கனரக லாரிகளை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட 4 டிப்பா் லாரிகள்- கோப்பிலிருந்து...
Updated On :31 ஜனவரி 2026, 7:55 pm

Syndication

மாா்த்தாண்டத்தில் பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்ட, கனிமவளம் ஏற்றிச் சென்ற 4 கனரக லாரிகளை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்வதை தடுக்கும் பொருட்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவின்படி, மாா்த்தாண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் ஆலோசனையின்பேரில், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் செல்லசுவாமி தலைமையிலான போலீஸாா் மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 4 கனரக லாரிகள் பின்பக்கம் பதிவெண் இல்லாமல் கனிமவளங்களை ஏற்றிச்செல்வது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.