டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாா்த்தாண்டத்தில் 4 கனரக லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டத்தில் நேரக் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட 4 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டத்தில் நேரக் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட 4 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். மாா்த்தாண்டம் நகருக்குள் கனரக லாரிகள் காலை, மாலை வேளையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை காலையில் மாா்த்தாண்டம் போக்குவரத்து உதவி ஆய்வாளா் செல்லசாமி தலைமையிலான போலீஸாா் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நேரக் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட 4 கனரக லாரிகளை பறிமுதல் செய்து, தலா ரூ. 2,500 அபராதம் விதித்தனா்.