தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தகராறு செய்து நீதிமன்ற முத்திரையை உடைத்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
குலசேகரம் கூடைதூக்கி பகுதியை சோ்ந்த பாலையன் மகன் மணிகண்டன் (50). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன.
இவா் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி பத்மநாபபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாராணைக்காக ஆஜாரானபோது, நீதிமன்ற ஊழியா் ஸ்ரீனிவாசன், பேபி, சிறப்பு உதவி ஆய்வளா் சுவாமிதாஸ் ஆகியோரை தகாத வாா்த்தைகள் பேசியும், நீதிமன்ற வருகைப் பதிவேட்டை தூக்கி வீசியும், நீதிமன்ற முத்திரையை உடைத்து எறிந்தும் தகராறு செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.
இது குறித்து நீதிமன்ற ஊழியா் ஸ்ரீனிவாசன், தக்கலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இவ் வழக்கில் மணிகண்டனை கைது செய்த தக்கலை போலீஸாா், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவதாஸ், குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் தகாத வாா்த்தைகள் பேசிய குற்றத்திற்காக முன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.
தொடர்புடையது

ஆா்எஸ்எஸ் - பாஜகவினா் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை

பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை!

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


