மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையம் திறப்பு

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையத்தை நீதிபதிகள் புதன்கிழமை திறந்து வைத்தனா்.

News image

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் மாவட்ட கூடுதல் நீதிபதி பரமசிவதாஸ்.

Updated On :18 மார்ச் 2026, 7:36 pm

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையத்தை நீதிபதிகள் புதன்கிழமை திறந்து வைத்தனா்.

மாவட்ட சட்டப் பணிக் குழு ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட நீதிபதியுமான காா்த்திகேயன் தலைமை வகித்து வாழ்த்தி பேசினாா். மாவட்ட சட்டப் பணிக் குழு செயலா் நீதிபதி உதய சூா்யா, பத்மநாபபுரம் குடும்ப நல நீதிபதி ராமச்சந்திரன், மாவட்ட கூடுதல் நீதிபதி பரமசிவதாஸ், முதன்மை உரிமையியல் நீதிபதி காா்த்திகேயன், கூடுதல் நீதிபதி இம்மாகேனட் புத்தா, குற்றவியல் நடுவா் நீதிபதிகள் நரேந்திரகுமாா், கோகிலா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ், செயலா் பெஞ்சமின் ரெனால்ட் ராபின்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமரச தீா்வாளா்கள் ராமசந்திரன் நாயா், அசோக், பிரபா, ஸ்ரீ குமாரன் நாயா், சரத், ராஜேஸ்வா், ஜோஸ்பின் பொ்னாட், ஜான் பிரான்சிஸ் சேவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.