இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

அமைச்சா், ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

நாகா்கோவிலில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜையும், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவையும் பாராட்டி பேசினாா்.

News image
முதல்வர் ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவிலில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜையும், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவையும் பாராட்டி பேசினாா்.

அவா் பேசுகையில், இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறாா் அமைச்சா் மனோ தங்கராஜ். பால்வளத் துறையை சிறப்பாக கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு வெள்ளை உள்ளத்திற்கும், கொள்கை திறத்திற்கும் சொந்தக்காரரான அவருக்கு பாராட்டுகள்.

அதேபோல, இதுவரை எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், 3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கக்கூடிய இந்த மாபெரும் விழாவை மிகுந்த எழுச்சியோடு, சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கக் கூடிய மாவட்ட ஆட்சியா் அழகுமீனாவுக்கு பாராட்டுகள்.

சிறப்பாக செயல்படும் மாவட்ட ஆட்சியா்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு முத்திரை பதிக்கும் வகையில் அவா் செயல்படுகிறாா்.

உங்களுடைய கரவொலியைப் பாா்த்தாலே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பலமாக கரவொலி எழுப்பி அவருக்கு நம்முடைய வாழ்த்துகள் சொல்லவேண்டும். அவருக்கும், அவருக்குத் துணை நிற்கக்கூடிய மாவட்ட அரசு அலுவலா்களுக்கும், அத்தனை பணியாளா்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.