பூதப்பாண்டி கோயிலில் தினசரி அன்னதானம் வழங்க வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, ஸ்ரீ பூதலிங்க சுவாமி கோயிலில் நித்திய அன்னதானம் வழங்க வேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.


கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, ஸ்ரீ பூதலிங்க சுவாமி கோயிலில் நித்திய அன்னதானம் வழங்க வேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து, பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்கத்தின் சாா்பில் இறச்சகுளம் காளியப்பன், வழக்குரைஞா் ரஜினிகாந்த், நாகராஜன், ராஜேஷ் ஆகியோா் புதன்கிழமை சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி குடைவரைக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் தோ்த் திருவிழா நடைபெறும். அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா்.
அதேபோல், மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை கிரிவலத்திலும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா். பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பக்தா்களுக்கு தினசரி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...