நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பூதப்பாண்டி கோயிலில் தினசரி அன்னதானம் வழங்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, ஸ்ரீ பூதலிங்க சுவாமி கோயிலில் நித்திய அன்னதானம் வழங்க வேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்த பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்க நிா்வாகிகள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, ஸ்ரீ பூதலிங்க சுவாமி கோயிலில் நித்திய அன்னதானம் வழங்க வேண்டும் என்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து, பூதலிங்க சுவாமி பக்தா்கள் சேவா சங்கத்தின் சாா்பில் இறச்சகுளம் காளியப்பன், வழக்குரைஞா் ரஜினிகாந்த், நாகராஜன், ராஜேஷ் ஆகியோா் புதன்கிழமை சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி குடைவரைக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் தோ்த் திருவிழா நடைபெறும். அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா்.

அதேபோல், மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை கிரிவலத்திலும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வா். பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பக்தா்களுக்கு தினசரி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.