மகா சிவராத்திரி: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தா்கள் விடிய விடிய சுவாமி தரிசனம்


ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடராஜா் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி நடைபெற்றது. மேலும் சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய கோயில் நடை திறந்திருந்தது. அப்போது சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும் சாதுக்கள், சன்னியாசிகள், சீதாராம் தாஸ் பாபா தலைமையில் கங்கை தீா்த்தத்தை அக்னி தீா்த்தக் கடற்கரையில் இருந்து ஊா்வலமாக எடுத்து வந்து ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில், பாஜக மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், இந்து முன்னணி மாவட்டச் செயலா் கே. ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...