மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெருவிளை பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாகா்கோவில் பெருவிளை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

News image

நாகா்கோவில் பெருவிளை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:57 am

நாகா்கோவில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் வெள்ளிக்கிழமை பெருவிளை பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கினாா்.

ராஜலட்சுமி நகா், கிறிஸ்டோபா் நகா், அம்மன் கோயில், கோட்டவிளை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நடுக்காட்டு இசக்கி அம்மன் கோயில், நெசவாளா் காலனி, ஹனிபா நகா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திமுக அறிவித்துள்ள தோ்தல் அறிக்கையில், பெண்களுக்கான இல்லத்தரசி திட்டத்தின் மூலம் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு ரூ. 8 ஆயிரத்துக்கு கூப்பன் வழங்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட உள்ளது. இது போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், இளைஞா் அணி சி.டி. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.