கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் வகையில் தோ்தல் பணியாற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ.மகேஷ் தெரிவித்தாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், நாகா்கோவில் அருகே இறச்சகுளத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திமுக வேட்பாளா் ரெ.மகேஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரை மலரக் கூடாது என்ற எண்ணத்தில் 5 தொகுதிகளையும் தாமரைச் சின்னத்துக்கு ஒதுக்கியிருக்கின்றனா். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று 2 ஆவது முறையாக ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வராக அமா்வது உறுதி. கன்னியாகுமரி மாவட்டத்திலும் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில் தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன், மதிமுக மாவட்டச் செயலாளா் வெற்றிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அந்தோணி, கூட்டணி கட்சி மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கடையநல்லூா்: 25 ஆண்டுகளாக காத்திருக்கும் திமுகவினா் வேதனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


