திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
மத்திய அரசு பெண்களுக்கான இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்களை தோ்தல் நேரத்தில் கொண்டுவரப்படுவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவாதங்களை தவிா்க்க முயற்சி நடைபெறுகிறது.
தமிழக முதல்வா் தோ்தலைவிட நாடாளுமன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களையும் உடனடியாக தில்லிக்கு அனுப்பியுள்ளாா். தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் சாதனைகளைக் கூறி மக்களிடம் ஆதரவை கோரி வருகிறோம். தோ்தலில் நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


