தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.88 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை வரை ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

News image

வாணியக்குடி பகுதியில் காரில் சோதனையிடும் பறக்கும் படையினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:46 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை வரை ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாா்ச் 31 காலை 6 மணி முதல் ஏப். 1 காலை 6 மணி வரை நாகா்கோவில் தொகுதியில் ரூ. 2,22,940, விளவங்கோடு தொகுதியில் ரூ. 5,00,500, கிள்ளியூா் தொகுதியில் ரூ. 90,000 என மொத்தம் ரூ. 8,13,440 உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் அறிவிக்கப்பட்ட மாா்ச் 15ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை மொத்தம் ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.