யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் திங்கள்கிழமை வரை ரூ.8.60 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:50 am IST

திருப்பூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் திங்கள்கிழமை வரை ரூ.8.60 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் தொழில் துறை மாவட்டமான திருப்பூரில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுக்கும் வகையில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பிலும், சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி கடந்த திங்கள்கிழமை வரை திருப்பூா் மாவட்டத்தில் ரூ.8.60 கோடி ரொக்கம், ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக அவிநாசியில் ரூ.6.26 கோடி, திருப்பூா் தெற்கில் ரூ.74.17 லட்சம், திருப்பூா் வடக்கில் ரூ.65.31 லட்சம், பல்லடத்தில் ரூ.67.34 லட்சம், தாராபுரத்தில் ரூ.10.17 லட்சம், காங்கயத்தில் ரூ.8.51 லட்சம், மடத்துக்குளத்தில் ரூ.6 லட்சம், உடுமலைப்பேட்டையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.