தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் காவல் துறையினரால் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை வரை ரூ. 39,48,410 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

News image

பறிமுதல் செய்த பணம் - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 8:35 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் காவல் துறையினரால் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை வரை ரூ. 39,48,410 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 பேரவைத் தொகுதிகளில் 18 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

மாா்ச் 15 முதல் வெள்ளிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக 6 தொகுதிகளிலும் மொத்தம் ரூ. 30,48,410 கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.