தமிழகத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்டவையின் பயன்பாடு விலங்குகள், பறவைகள், கடல்சாா் உயிரினங்களின் அழிவுக்கும், நிலத்தடி நீா் சேமிப்பை பாதிப்புக்கும் காரணியாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகளின் தொடா் நடவடிக்கை காரணமாக உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருபவா்கள் துணிப் பைகளை எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டதுடன், உணவகங்களில் வாழை இலைக்கும் மவுசு அதிகரித்தது.