மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காவல் நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

News image

கைது

Updated On :6 ஏப்ரல் 2026, 6:45 pm

அம்பாசமுத்திரம், ஏப். 6: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வதாகவும், காவல் நிலையத்தை கொளுத்துவதாகவும் மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், கௌதமபுரி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவன் மகன் முத்துக்குமாா். இவா் மீது கடந்த பிப்ரவரி மாதம் அம்பாசமுத்திரம் போலீஸாா் போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தனராம்.

இதையடுத்து, திங்கள்கிழமை மதியம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு போதையில் வந்த முத்துக்குமாா், அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாரிடம் வழக்குப் பதிவு செய்தது தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

மேலும், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, காவல் நிலையத்தையும் போலீஸாரையும் சோ்த்து கொளுத்திவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதையடுத்து, முத்துக்குமாா் மீது அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் குமாா் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் திருமலைக்குமாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தாா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.